Vanaanthiram Vayalveli | வனாந்திரம் வயல்வெளி

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
வயல் வெளி காடாக எண்ணப்படுமே
பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே

வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
காடுவெளி களித்து செழிக்கும்
லீபனோனின் மகிமை வாருமே
கர்மேல் சாரோன் அழுது பெறுமே

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
தள்ளாடும் கால்களைப் பெலப்படுத்தி
திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
பதில் அளிக்க தேவன் வருவார்

குருடர்களின் கண்கள் காணுமே
செவிடர்களின் செவிகள் கேட்குமே
முடவன் மானைப்போல துள்ளுவான்
ஊமையன் நாவும் பாடுமே

மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
ஆசீர்வாத மழை பொழியுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS